- மதுரை
- இன்ஸ்பெக்டர்
- வனிதா
- எஸ்ஐ முத்துராஜா
- மதுரை மண்டல சிவில் சப்ளை மற்றும் குற்றச்சாட்டு விசாரணை
- காமராஜர் ரோட், மதுரை
- தின மலர்
மதுரை, மார்ச் 19: மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ முத்துராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார், மதுரை, காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை அவர்கள் சோதனை செய்தனர். அதில் தலா 35 கிலோ எடை கொண்ட 1050 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி, 30 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவரான தெப்பக்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அரிசி மூட்டைகளை வெளிமாநிலங்களுக்கு லாரியில் கடத்திச்செல்வதற்காக ஆட்டோவில் எடுத்துக்கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் கடத்தல் ரேஷன் அரிசி மற்றும் அதனை வைத்திருந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
The post 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.